Tuesday, December 9, 2014

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகள் இன்றி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தேர்தலில் வெற்றிபெறுவார்: விநாயகமூர்த்தி முரளிதரன்!

Tuesday, December 09, 2014
இலங்கை::
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகள் இன்றி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தேர்தலில் வெற்றிபெறுவார் என்றும் உங்கள் வாக்குகள் அவருக்கும் தேவையில்லை என்றும் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவிக்கின்றார்.
 
மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதி அமைச்சர்  இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள மக்கள் மத்தியில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த ஆள் என்ற பார்வை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள பிஸ்னஸ்காரன் தூற்றினாலும் கிராமங்களுக்கு போனால் அந்த மக்கள் ஜனாதிபதியை மறக்கமாட்டாட்ரகள்  அதனால் அவர் தான் வருவார். அதனால் அதனை பயன்படுத்திகொள்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் மக்களின் வாக்கோ முஸ்லிம் மக்களின் வாக்கோ இல்லாமல் அவர் வெல்லுவார். அதற்கு வாக்களிக்கவும் தேவையில்லை. நீங்க எதிர்த்து வாக்களித்தாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே வெல்லுவார் என்றும் கூறினார்.

இப்போ யுத்தம் முடிவடைந்ததும் நீஙகள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கின்றீர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கிளிநொச்சியை 24மணிநேர சண்டையில் கிளிநொச்சியை தான் மீட்டதும் ஏ-9 வீதியில் வாகனத்தில் முதன் முதலில் சென்றபோது செத்துக்கிடந்த உடல்களைப் பார்த்தவுடன் சமாதானத்திற்கு செல்ல வேண்டும் என தீர்மானித்தாகவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment