Friday, December 19, 2014
இலங்கை::எந்த சூழ்நிலையிலும் பாப்பாண்டவர் முதலம்
பிரான்ஸிஸின் விஜயம் ரத்து செய்யப்பட மாட்டாது என கார்தினல் மெல்கம்
ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இலங்கை விஜயத்தை ரத்து செய்யுமாறு பாப்பாண்டவரை கோரும் எவ்வித உத்தேசமும் கத்தோலிக்க திருச்சபைக்கு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தலில் யார் வெற்றியீட்டினாலும் வன்முறைகளில் ஈடுபடுவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, தேர்தலில் மக்கள் சுயாதீனமான அடிப்படையில் வாக்களிப்பதற்கு சகல ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுயாதீனமான முறையில் தேர்தல் நடத்தப்படுவதனை உறுதி செய்ய வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் பாப்பாண்டவர் திட்டமிட்டவாறு இலங்கைக்கு விஜயம்
செய்வார் என அவர் குறிப்பிட்டுள்ளார். பாப்பாண்டவரின் இலங்கை விஜயத்திற்கான
சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடையும் தருவாயை அடைந்துள்ளதாகத்
தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் காரணமாக பாப்பாண்டவரின் இலங்கை விஜயம்
ஒத்தி வைக்கப்படலாம் என கருத்துக்கள் வெளியாகியிருந்தன.
இலங்கை விஜயத்தை ரத்து செய்யுமாறு பாப்பாண்டவரை கோரும் எவ்வித உத்தேசமும் கத்தோலிக்க திருச்சபைக்கு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தலில் யார் வெற்றியீட்டினாலும் வன்முறைகளில் ஈடுபடுவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, தேர்தலில் மக்கள் சுயாதீனமான அடிப்படையில் வாக்களிப்பதற்கு சகல ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுயாதீனமான முறையில் தேர்தல் நடத்தப்படுவதனை உறுதி செய்ய வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment