Friday, December 05, 2014
இலங்கை::இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 38 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் காவல் நீட்டிப்பு செய்துள்ளது.
இலங்கை::இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 38 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் காவல் நீட்டிப்பு செய்துள்ளது.
க
டந்த செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் இலங்கை கடற்படையால் சிறைபிடித்து செல்லப்பட்ட ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த 38 மீனவர்களின் சிறைக்காவல் நேற்றுடன் முடிவடைந்தது.
அதை தொடர்ந்து இன்று காலை இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் 38 மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களின் சிறைக்காவலை இம்மாதம் 18 ஆம் தேதி வரை நீட்டித்து ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து மீனவர்கள் 38 பேரும் யாழ்ப்பாணம் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது தமிழக மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment