Monday, November 10, 2014

இலங்கை குறித்த ஐ. நா. மனித உரிமை ஆணையரின் செயற் பாடுகள் ஐ. நா. வுடனான ஆக்கபூர்வ மான பேச்சுக்களை பாதிக்கும்: ரவிநாத் ஆரியசிங்க!

Monday, November 10, 2014
ஜெனீவா::ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் சையத் அல்- ஹுசைன் ஐ. நா. வின் இறை மையுள்ள தேசமொன்றை நிந்திக்கிறார். அத்துடன் அவர் பொறுமையிழந்து எல்லை மீறிய வார்த்தை பிரயோகங்களை பயன் படுத்துகிறார். இவ்வாறு அரசாங்கம் குற்றம்சாட் டியுள்ளது.
 
இலங்கை குறித்த ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் விடுத்திருந்த கடும் அறிக்கைக்குப் பின்னர் அவருக்கு இலங்கை சார்பாகப் பதில் அனுப்பப் பட்டுள்ளது.
 
இந்தப் பதில் கடிதத்தை, ஜெனீவா வுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க அனுப்பி வைத்துள்ளார்.
 
ஐ. நா. மனித உரிமை ஆணையரின் இவ்வாறான செயற் பாடுகள் ஐ. நா. வுடனான ஆக்கபூர்வ மான பேச்சுக்களை பாதிக்கும் என்று அந்தக் கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ. நா. மனித உரிமைகள் கவுன்ஸில் நடத்தும் புலன் விசாரணைகளில் நம்பகத் தன்மை, நேர்மை ஆகியவற்றின் மீது இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருவதாக ஐ. நா. மனித உரிமை கள் ஆணையர் சையத் அல் ஹுஸைன் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஐ. நா. மனித உரிமை ஆணை யாளரின் கருத்துக்கு இலங்கை பதில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை குறித்து வெளியிட்ட கருத்துக்கு இலங்கை சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு நடத்தும் விசாரணைகளின் நம்பகத்தன்மை, நேர்மை ஆகியவற்றின் மீது இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருவதாக, ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயித் ராத் அல் ஹுஸைன் வெள்ளிக்கிழமை குறிப்பிட்டிருந்தார்.
 
இதற்கே ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க பதிலளித்துள்ளார்.
 
இது வருந்தத்தக்க விடயம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் எல்லை மீறிய வார்த்தைகளை ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமை கொண்ட இறையாண்மையுள்ள நாட்டின் மீது பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசொன்றின் மீது அவதூறு ஏற்படுத்தியுள்ளதோடு, இழிவுபடுத் தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இந்த நடவடிக்கை, இலங்கை அரசு தொடர்ந்து தொடர முயன்று வருகின்ற ஆக்கபூர்வமான செயற்பாடுகளை கட்டுப்ப டுத்தக்கூடியவையாகும் எனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment