Thursday, November 20, 2014

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அவசரநிலை அறிவிப்பு : கடும் பனிக்கு 4 பேர் பலி!


Thursday, November 20, 2014
நியூயார்க்::அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று ஏற்பட்ட கடும் பனிப் பொழிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க், நார்த் டகோடா, மினசோடா, விஸ்கான்சின், மிச்சிகன், ஒஹியோ மற்றும் பென்சில்வேனியா உட்பட பல பகுதிகளில் தற்போது பனி கடுமையாக பொழிகிறது.
 
 சில இடங்களில் இரவு நேரத்தில் வெப்பநிலை மைனஸ் 11 டிகிரி செல்சியஸாக உள்ளது. ஒரு மணி நேரத்துக்கு 13 செ.மீ அளவுக்கு பனி பொழிகிறது. நியூயார்க்கின் பவ்பலோ நகரில் 6 அடி உயரத்துக்கு பனி படர்ந்துள்ளது. இதனால் மக்கள் வெளியே வரமுடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
 
குளிர் தாங்க முடியாமல் நியூயார்க் நகரில் இதுவரை 4 பேர் பலியாகிவிட்டனர்.  சில இடங்களில் வாகனங்கள் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் நிலைமை மிகமோசமாக இருப்பதால், அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டு மீட்பு பணி நடக்கிறது.


No comments:

Post a Comment