Sunday, November 30, 2014

ஆஸி.யில் தஞ்சம் அடைய படகில் வந்த 37 அகதிகள் இலங்கையிடம் ஒப்படைப்பு!

Sunday, November 30, 2014
ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புகுவதற்காக படகில் சென்ற 37 இலங்கை அகதிகளை ஆஸ்திரேலிய கடலோர பாதுகாப்பு படையினர் பிடித்து, இலங்கையிடம் ஒப்படைத்தனர்.இலங்கையிலிருந்து கடந்த 1ம் தேதி 6 குழந்தைகள் உட்பட 37 பேர் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புகுவதற்காக படகில் சென்றனர். சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவில் நுழைய முயன்ற இவர்களை, இந்தோனேஷிய கடல் பகுதியில் வழிமறித்து ஆஸ்திரேலிய கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்தனர்.
 
இது குறித்து இலங்கை கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த 27ம் தேதி 37 அகதிகளும் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
 
அவர்களை, இலங்கையின் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். முன்னதாக, கடந்த ஜூலை மாதம் இதே போல தஞ்சமடைய வந்த 41 இலங்கை அகதிகளை ஆஸ்திரேலிய கடலோர பாதுகாப்பு படையினர் கைது செய்து இலங்கையிடம் ஒப்படைத்தனர். சட்டவிரோதமாக நாட்டிலிருந்து வெளியேறியதாக அவர்கள் மீது தொடரப்பட்ட அந்த வழக்கு கொழும்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

No comments:

Post a Comment