Sunday, October 19, 2014

மக்களுக்கான போக்குவரத்தை இலகுபடுத்தும் நோக்கில் இ.போ.சபையின் ஒரு தொகுதியினருக்கு பதவியுயர்வு!

Sunday, October 19, 2014
இலங்கை::மக்களுக்கான போக்குவரத்தை இலகுபடுத்தும் நோக்கில் தம்மால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைவாக புதிய பேரூந்துகளைப் பெற்று தந்தமைக்காக யாழ்ப்பாணம் வவுனியா சாலைகளின் முகாமையாளர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை நேரில் சந்தித்து தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின்

இதன் பிரகாரம் வடமாகாணத்திலுள்ள இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம், வவுனியா சாலைகளுக்கு தலா 10 வீதம் புதிய பேரூந்துகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவிடம் விடுத்த கோரிக்கைக்கமைவாக பெற்றுக்கொள்ளப்பட்ட புதிய பேரூந்துகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் வடபகுதிக்கு அண்மையில் விஜயம் செய்திருந்தபோது வழங்கி வைத்தார்.

இதேபோன்று ஏனைய 5 சாலைகளுக்கும் புதிய பேரூந்துகள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இன்றைய சந்திப்பில் பதவி உயர்வுகளைப் பெற்றுக்கொண்ட ஒரு தொகுதியினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பதவி உயர்வுப் பத்திரங்களை வழங்கி வைத்தார்.

இதன்போது யாழ்.சாலை முகாமையாளர் குலபாலச்செல்வம், வவுனியா சாலை சந்திரன் மற்றும் வடமாகாண ஜனநாயகப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் தலைவர் புவி உள்ளிட்ட சங்கத்தின் பிரதிநிதிகளும் உடனிருந்தனர்.
செயலகத்தில் இன்றையதினம் (19) இடம்பெற்ற பிரத்தியேக சந்திப்பின் போதே அவர்களால் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment