Saturday, October 11, 2014

சிவில் ஹெலிகொப்டர் சேவையொன்றை அடுத்த வாரத்துக்குள் - தனியார் நிறுவனமொன்றுக்கு அனுமதி!

Saturday, October 11, 2014
சிவில் ஹெலிகொப்டர் சேவையொன்றை அடுத்த வாரத்துக்குள் ஆரம்பிப்பதற்கு தனியார் நிறுவனமொன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
வரையறுக்கப்பட்ட ஐ.டபிள்யு.எஸ். எவ்யேஷன் தனியார் கம்பனிக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த கம்பனியின் தலைவர் ஐ.டபிள்யு. சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
 
சுற்றுலா, உள்நாட்டு விஜயம், வானியல் ஆய்வுகள், ஆகாயத்திலிருந்து புகைப்படம் எடுத்தல், திரைப்படம் தயாரிப்பு, சிவில் விமான நிலையங்களுக்கிடையிலான சேவை, விளையாட்டு மற்றும் செய்தி பெறுவதற்கான அவசர கள விஜயங்கள் என்பவற்றுக்கு இந்த குளிரூட்டப்பட்ட ஹெலிகொப்டர் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இரத்மலான விமான நிலையத்திலிருந்து இந்த சேவை முன்னெடுக்கப்படும் எனவும் அக் கம்பனியின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment