Wednesday, October 22, 2014

புலிகள் மீது தடை விதிக்குமாறு கோரி நாடாளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்: ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச!

Wednesday, October 22, 2014
இலங்கை::புலிகள் மீது தடை விதிக்குமாறு கோரி நாடாளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
 
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புலிகளுக்கு எதிரான தடை மீளவும் அமுல்படுத்தப்பட வேண்டுமெனக் கோரி ஏகமனதாக நாடாளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
 
இந்த தீர்மானம் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றிற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும்.நீதிமன்ற தீர்ப்பிற்கு அமைய ஐரோப்பிய ஒன்றியம் புலிகளுக்கு எதிரான தடையை நீக்கியுள்ளது.
 
இந்த தடை நீக்கமானது இலங்கையின் பௌதீக ஒருமைப்பாடு, சுயாதீனத்தன்மை, இறையாண்மை போன்றவற்றுக்கு பாரதூரமான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
 
புலிகளுக்கு எதிரான தடை நீக்கப்பட்டமை குறித்து விசேட நாடாளுமன்ற அமர்வுகளை நடத்தி, தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
 

No comments:

Post a Comment