Wednesday, October 22, 2014

யாழ். மாவட்டத்திலுள்ள வியாபார நிலையங்களில் இடம்பெறும் மோசடிகளைக் கட்டுப்படுத்த பறக்கும் படை: யாழ். மாவட்ட அரசஅதிபர் சுந்தரம் அருமைநாயகம்!

Wednesday, October 22, 2014
இலங்கை::யாழ். மாவட்டத்திலுள்ள வியாபார நிலையங்களில் இடம்பெறும் மோசடிகளைக் கட்டுப்படுத்த பறக்கும் படையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசஅதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். இப் பறக்கும் படையிடம் இரு தடவைக்கு மேல் மோசடிகள் அகப்பட்டால் வியாபார நிலைய உரிமம் ரத்து செய்யப்பட்டு இழுத்து மூடப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.   
 
அது தொடர்பில் கருத்து  தெரிவித்த அவர், கடந்த மாதத்தில் யாழ். மாவட்டத்தில் முறைகேடான வியபபார நடவடிக்கையில் ஈடுபட்ட 53 வர்த்தகர்களுக்கு ஒரு இலட்சத்து 85 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. அதே மாதத்தில் காலாவதியான முகப்பூச்சு, மருந்து வகைகள் , உணவுப்பொருட்கள் என 36 வகைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றார்.     
 
இக் குழு திடீர் திடீரென வியாபார நிலையங்களில் பரிசோதனை மேற்கொள்வதோடு வியாபார நிலையமொன்று இரு தடவை அகப்பட்டால் வியாபார உரிமம் ரத்து செய்யப்படும் என்றார்.

No comments:

Post a Comment