Sunday, October 5, 2014

காதோடு காதாக...!!!இது வடக்கு முதல்வரின் பகிரங்கமான அறிவிப்பு!!

Sunday, October 05, 2014
* இது வடக்கு முதல்வரின் பகிரங்கமான அறிவிப்பு
 
தமது மக்களுக்கு உதவ முன்வருபவர்களுக்குத் தாம் அனுசரணையாக இருப்பார்களாம். இது வட மாகாண முதலமைச்சரின் அறிவிப்பு. கேட்கவே சிரிப்பு வருகிறது. அப்பகுதி மக்களுக்கு சேவை செய்ய முன்னிற்கும் அரசாங்கத்தின் உதவிகளைத் தூக்கியெறிந்து கதைவிடும் ஐயா இப்போ உதவி செய்ய யாருக்கு அழைப்பு விடுக்கிறாரோ தெரியவில்லை. ஐயா இப்போது எதை எங்கு கதைத்தாலும் அதை அப்பவே பிரசுரிப்பதற்குச் சில ஊடகங்கள் ஒற்றைக் காலில் நிற்கின்றனவாம்.
 
* உண்மையிலேயே இவர்தான் சிரேஷ்ட பத்திரிகையாளர்
 
சர்வதேச ஊடகவியலாளர்களுக்கு இருக்கும் சுதந்திரம் இலங்கை ஊடகவியலாளர்களுக்கு இல்லையாம். சிரேஷ்ட பத்திரிகையாளர் ஒருவர் இணையமொன்றின் காணொளிக்கு தெரிவித்துள்ள கருத்தே இது. அதே பத்திரிகையாளர் இன்னொரு ஊடகத்திற்கு இலங்கையில் பத்திரிகையாளர்களுக்குள்ள சுதந்திரம் வேறெந்த நாட்டிலும் இல்லை எனக் கூறியுமுள்ளாராம். என்ன பிழைப்பு இது? இடத்திற்கு ஏற்றவாறு கூறினால்தான் பிழைக்கலாம் என்பதை இப்பத்திரிகைக்காரர் நன்கு புரிந்து வைத்திருக்கிறார். உண்மையிலேயே அவர் சிரேஷ்ட பத்திரிகையாளர்தான்.
இங்குள்ள இவர் அங்குள்ளஅவவுக்கு சப்போட் பண்ணுகிறார்?
 
ஜெயலலிதாவை விமர்சிக்க இங்கே எவருக்கும் அருகதை இல்லையாம். மனோ ஐயாவின் கடுந் தொனியிலான அறிக்கை இது. உண்மைதான். அந்த அம்மணி மாதிரி இங்கு எவருமே சொத்து சேர்க்கவில்லைத்தான், சேர்க்கவும் முடியாது. ஒருவேளை இங்குள்ள இவரைப் போலவே எவ்விதமான களைப்போ, சலிப்போ. மலைப்போ இல்லாது தொடராக அங்குள்ள அந்த அம்மணியும் அறிக்கைகளை விட்டு வந்ததால் இங்குள்ள இவர் அங்குள்ள அவவுக்கு சப்போட் பண்ணுகிறாரோ?

No comments:

Post a Comment