Wednesday, October 1, 2014

மூன்று தசாப்தகால பயங்கரவாதத்தினால் பாதிப்புகளை சந்தித்துள்ள இலங்கைக்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்செல் ஜெ.சிசன்!

Wednesday, 01, October, 2014
இலங்கை::மூன்று தசாப்தகால பயங்கரவாதத்தினால் பாதிப்புகளை சந்தித்துள்ள இலங்கைக்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்  தெரிவித்துள்ளார்.

கண்டிக்கு விஜயம் மேற்கொண்டு பௌத்த தலைவர்களை சந்தித்த வேளையே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின் போது மதத்தலைவர்கள் மற்றும் இலங்கையின் நண்பர்கள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் பங்களிப்பாற்ற வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை முழுவதும் பெருமளவானவர்கள் துயரங்களை அனுபவித்துள்ளனர் என்பது எங்களுக்கு தெரியும், என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராஜதந்திரிகள்  கொழும்பிற்க்குள் மாத்திரம் முடங்கிவிடக்கூடாது, இலங்கை முழுவதும் சென்று வர வேண்டும் என தான் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மதத் தலைவர்களை சந்தித்து அவர்களது கருத்துக்களை கேட்பது அவசியமென கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

No comments:

Post a Comment