Friday, October 31, 2014

மீனவர்களுக்கு தூக்கு: இலங்கை தூதரகம் முற்றுகை- 300 பேர் கைது!

 Friday, October 31, 2014
சென்னை,இலங்கை கோர்ட்டு 5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்ததை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை தமிழ் கூட்டமைப்பு நிர்வாகிகள் முற்றுகையிட்டனர்.


தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், பொதுச் செயலாளர் எம்.எஸ். சண்முகம், துணைப் பொதுச் செயலாளர் சத்ரியன் து.வெ.வேணு கோபால், பொருளாளர் அக்ரம்கான், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, தமிழ் கூட்டமைப்பு நிர்வாகிகள் மணியரசன், தியாகு உள்பட சுமார் 300 பேர் இலங்கை தூதரகத்தை நோக்கி ஆவேசம் முழங்க முற்றுகையிட சென்றனர்.
போலீசார் அவர்களை அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது திடீரென சத்ரியன் வேணுகோபால், சைதை சிவராமன், கோயம்பேடு முத்துராஜ், வீரராகவன், வசந்த் நந்தகுமார், செந்தில்குமார், வெள்ளையம்மாள் ஆகியோர் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கொடும்பாவியை எரித்தனர். இலங்கை நாட்டு கொடியையும் தீ வைத்து கொளுத்தினார்கள்.
 
இதை பார்த்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் 300–க்கும் மேற்பட்டோர் கைதானார்கள். அனைவரையும் நுங்கம்பாக்கம் வடக்கு மாடவீதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இன்று மாலை அனைவரும் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

No comments:

Post a Comment