Saturday, September 20, 2014

புலிகளின் ஆயுதங்கள் அழிக்கப்பட்டதாக இந்தியா அறிவித்துள்ளது!

Saturday, September 20, 2014
நாகப்பட்டினம்::புலிகளின் ஆயுதங்கள் அழிக்கப்பட்டதாக இந்தியா அறிவித்துள்ளது.

தமிழகத்தின் நாகப்பட்டினம் காவல்துறையினர் இவ்வாறு புலிகளின் ஆயுதங்களை அழித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1985ம் ஆண்டு மீட்கப்பட்ட ஆயுதங்களே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

நாகப்பட்டினம் மாவட்டத்தின்  வேதாரணியம் மற்றும் கோடிக்கரை ஆகிய பகுதிகளின் கரையோரங்களிலிருந்து இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டிருந்தன.

250 கைக்குண்டுகளும், 166 டெட்டனேட்டர்களும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட் வெடிபொருட்கள் நீண்ட நாட்களாக பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment