Friday, September 19, 2014

இராணுவப் பயிற்சி முடித்து 500 தமிழ் இளைஞர் யுவதிகள் வெளியேறுகின்றனர்!

Friday, September 19, 2014
இராணுவத்தின் தொண்டர் படையில் சேரத்துக்கொள்ளப்பட்ட 500 யாழ் இளைஞர்கள் மூன்று மாதகால பயிற்சியை நிறைவு செய்து இம்மாதம் 20 ஆம் திகதி வெளியேறுகின்றனர்.
 
இது தொடர்பான விசேட நிகழ்வு காங்கேசன்துறயில் உள்ள இலங்கை மெக்கானிக்கல் மற்றும் மின்சார பொறியியல் மைதானத்தில் நடைபெறும்.
 
யாழ்ப்பாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 400 இளைஞர்களுக்கும் 100 யுவதிகளுக்கும் மூன்று மாதகால இராணுவப் பயிற்சி மற்றும் பல்துறைத் தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
 
இவர்கள் காங்கேசன்துறை மற்றும் ‘தல்செவன’ விடுமுறை விடுதி ஆகியவற்றில் பணியில் அமர்த்தப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment