Saturday, August 23, 2014

ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு தகவல்களை வழங்க: இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மறுப்பு!

Saturday, August 23, 2014
இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு தகவல்களை வழங்க மறுத்துள்ளதாக  பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
வன்னியில் இடம்பெற்ற புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின் போது சீனா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் பல்வேறு வழிகளில் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தது.
 
இதுகுறித்த தகவல்களை வழங்க இந்த நாடுகள் மறுத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழு செய்தி வெளியிட்டுள்ளது
 
விசாரணைக் குழுவின் நடவடிக்கைகளை இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும்  பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment