Saturday, August 23, 2014

இலங்கை தொடர்பில் அமெரிக்க புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளது: பிரசாத் காரியவசம்!

Saturday, August 23, 2014
அமெரிக்கா இலங்கைக்கு எதிராக செயற்படவில்லை என அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை விவகாரங்கள் தொடர்பிலேயே இலங்கை குறித்து கருத்து வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் சிறந்த உறவுகள் நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக்கொள்ளும் நோக்கில் இலங்கை ராஜதந்திரிகள் அமெரிக்க அதிகாரிகளுடன் அடிக்கடி சந்திப்புக்களை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தொடர்பில் அமெரிக்க புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், தமிழக அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக இலங்கை எதிர் கொள்கைகளை பின்பற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றங்களையும் காண முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment