Friday, August 1, 2014

பாலஸ்தீன விவகாரம் நவநீதம்பிள்ளை தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டுமென ஜாதிஹ கெல உறுமய வேண்டுகோள் விடுத்துள்ளது!

Friday, August ,01, 2014
இலங்கை::பாலஸ்தீன விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டுமென ஜாதிஹ கெல உறுமய வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாலஸ்தீனத்தில் இடம்பெறும் இனப்படுகொலை குறித்த நிலைப்பாட்டைஅவர் தெளிவுபடுத்த வேண்டுமென நாங்கள் கேட்கிறோம், அவர் அதனை உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும், ஆனால் அவர் பாலஸ்தீனியர்கள் விடயத்தில் சர்வதேச சட்டமும் மனிதாபிமான சட்டங்களும் மீறப்படும் போது அமைதியாக உள்ளார் என ஜாதிஹ கெல உறுமய குற்றம்சாட்டியுள்ளது.

அவர் சில நாடுகளின்விடயத்தில் இரட்டை வேடம் போடுகின்றார், விமானம்சுட்டு வீழ்த்தப்பட்ட வேளை யுத்தக் குற்றம் என்றவர் இந்த விடயத்தில் மௌனம் சாதிக்கிறார் எனவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment