Friday, July 18, 2014

புலிகளின் சகல வான் தாக்குதல்களையும் அண்மையில் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்ட குசாந்தன் என்ற புலி உறுப்பினரே மேற்கொண்டுள்ளார்

Friday, July 18, 2014     
புலிகளின் சகல வான் தாக்குதல்களையும் அண்மையில் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்ட குசாந்தன் என்ற புலி உறுப்பினரே மேற்கொண்டுள்ளார் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
 
கொழும்பு, கட்டுநாயக்க, கொலன்னாவ, கெரவலபிட்டிய மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களை குசாந்தன் வழி நடத்தியுள்ளார்.
 
பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
2007ம் ஆண்டில்  புலிகளின் வான்படையின் இரண்டாம் நிலைத் தலைவராக தம்மை, பிரபாகரன் நியமித்தார் என விசாரணைகளின் போது குசாந்தன் தெரிவித்துள்ளார்.
 
புலிகளுக்காக விமானங்களைக் கொள்வனவு செய்து பங்களாதேஷ் ஊடாக இந்தோனேசியாவிற்கு எடுத்துச் சென்று அங்கிருந்து அவற்றை முல்லைத்தீவிற்கு எடுத்துச் சென்ற விபரங்களை குசாந்தன் வெளியிட்டுள்ளார்.
 
புலிகளின் சகல வான் தாக்குதல்களையும் குசாந்தனே வழிநடத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
அண்மையில் குசாந்தன் உள்ளிட்ட மூன்று  புலி உறுப்பினர்கள் மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டதாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment