Wednesday, July 30, 2014

போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில்,கடற்படை வீரர் கைது!

Wednesday, July 30, 2014
இலங்கை;;போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில், பலப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கடற் படை வீரர் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை  ஊடகப்  பேச்சாளர் கொமாண்டர் பிரசன்ன கோசல வர்ணக்குலசூரிய  தெரிவித்தார்.
போதைப்பொருள் அருகில் வைத்திருந்தமை தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
அனுரகுமார திஸாநாயக்கவின் சாரதி  கைது!
 
நாடாளுமன்ற  உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவின் சாரதி  கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.
 
பாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்தியமை தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்,47 வயதான சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற  உறுப்பினரும் அக்கட்சியின் தலைவருமான அனுரகுமார திஸாநாயக்க சென்ற வாகனம் நேற்று    இரத்தினபுரி - பாணந்துறை பிரதான வீதியில் எஸ் வளைவில் விபத்துக்குள்ளாகியது.
 
இவ்விபத்தில் காயமுற்ற பாரளுமன்ற உறுப்பினரும் அவரது சாரதியும் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment