Wednesday, July 30, 2014

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த 50 தமிழக மீனவர்கள் கைது!

Wednesday, July 30, 2014
இலங்கை:இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த 50 தமிழக மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளதாக கடற்படையின் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
 
நெடுந்தீவு மற்றும் பருத்தித்துறை கரையோர பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ் நாடு நாகை மாவட்டம் கோடி யக்கரை பகுதியிலிருந்து ஐந்து இழுவைப்படகுகள் மற்றும் 2 நாட்டுப் படகுகளுடன் வந்து நேற்றுக் காலை சுமார் 6.30 மணியளவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
 
மீனவர்கள் 50 பேரும் மேலதிக விசாரணைக்காக கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள துடன் படகுகள் காங்கேசன்துறை கடற்படை துறைமுகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment