Saturday, May 31, 2014

கல்முனையில் நவீன நீதிமன்ற கட்டிடத்தொகுதி அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்!

Saturday, May 31, 2014
இலங்கை::கல்முனை நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள நீதிமன்ற கட்டிடங்களின் வசதிகள் பற்றாக்குறை தொடர்பான கலந்துரையாடல் நேற்று நீதிமன்றக் கட்டிடத்தில் நடைபெற்றது . 
 
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் மற்றும் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோரது தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கல்முனை மேல் நீதிமன்ற, நீதிவான் நீதிமன்ற, மாவட்ட நீதிமன்ற ய உட்பட மட்டக்களப்பு மாவட்ட நீதிபதிகளும், சட்டத்தரணிகள் சங்க அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர். 
 
கல்முனையில் சகல வசதிகளையும் கொண்ட நவீன நீதிமன்ற கட்டிடத்தொகுதி ஒன்றை அமைப்பது தொடர்பான விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் மட்டக்களப்பு நீதிமன்றங்களின் குறைபாடுகளும் கண்டறியப்பட்டன . 
 
கல்முனைக்கு வருகை தந்த பிரதம நீதியரசரை கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர் சம்பிரதாய பூர்வமாக வரவேற்றார். 

No comments:

Post a Comment