Tuesday, April 29, 2014

எங்களுக்கு உடைந்த நாற்காலிகளை வழங்கி அதில் உட்காருமாறு அரசாங்கம் கேட்கின்றது: புலிகளின் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன்

Tuesday, April 29, 2014
இலங்கை::எங்களுக்கு உடைந்த நாற்காலிகளை வழங்கி அதில் உட்காருமாறு அரசாங்கம் கேட்கின்றது. நாங்கள் எப்படி உட்காருவது எமக்கான அதிகாரங்கள் போதாது என வடமாகாண முதலமைச்சரும் உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண சபையில் வைத்தே அவர் நேற்று திங்கட்கிழமை மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.

யுத்தக்காலத்தின் போது வடமாகாண சபை ஆளுநராக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிக்கு பதிலாக இராணுவம் அல்லாத ஒருவரை ஆளுநராக நியமிப்பதற்காக எதிர்வரும் ஜூலை மாதம் வரை காத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு வருவதற்கு முன்னர் கந்தசாமி கமலேந்திரனை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி குற்றவாளியாக இனங்கண்டு கட்சியிலிருந்து நீக்கியமை எனக்கு கவலையளிக்கின்றது என்றார்.

புதிய எதிர்க்கட்சித் தலைவரை வரவேற்பதில் மகழ்ச்சியடைகின்றேன். தொடர்ந்து வரும் செயற்பாடுகள் பயன்மிகுந்ததாகவும், விரைவாகவும் மேற்கொள்ளப்படவேண்டும்.

No comments:

Post a Comment