Thursday, April 24, 2014
இலங்கை::இணையதள விளம்பரங்களின் மூலம் சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை::இணையதள விளம்பரங்களின் மூலம் சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறுவர் சிறுமியரை கவரக்கூடிய வகையில் இணையத்தில் விளம்பரம் செய்து, அவர்களுடன் பேசி, அவர்களை நேர்முகத் தேர்விற்கு அழைத்து துஸ்பிரயோகம் செய்வதாகவும், வேறு நபர்களுக்கு சிறுவர் சிறுமியரை விற்பனை செய்வதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சம்பவம் தொடர்பில் தோட்ட அதிகாரி மற்றும் கணினி தொழில்நுட்பவியலாளர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பல்வேறு செயற்திட்டங்களுக்கு உதவி வழங்குவதாகத் தெரிவித்து இணையத்தில் விளம்பரம் செய்யப்படுகின்றது. விளம்பரம் தொடர்பில் மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளும் ஆவலுடன் தொடர்பு கொள்ளும் சிறுவர், சிறுமியரை சிலர் ஏமாற்றி துஸ்பிரயோகம் செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment