Thursday, April 24, 2014

கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் கண்ணிவெடி வெடித்ததில் இரண்டு கண்களையும் இழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

Thursday, April 24, 2014
இலங்கை::
யாழ்.கிளாலிப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் கண்ணிவெடியொன்று வெடித்ததில் தனது இரண்டு கண்களையும் இழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (24.04.14) காலை 10.30 மணிக்கு இடம்பெற்ற இந்த வெடி விபத்தில் மிருசுவில் கேற்பேலி இராணுவ முகாமைச் சேர்ந்த 27 வயதுடைய சமன் குமார என்ற  இராணுவ சிப்பாயே படுகாயமடைந்தவராவார்.

படுகாயமடைந்த இவர் முதலில் சாவகச்சேரி  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
 
 

No comments:

Post a Comment