Wednesday, March 12, 2014

மீண்டும் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு உயிர்கொடுக்க மேலைத்தேய நாடுகள் முயற்சி:ஐக்கியத்திற்கான சர்வமத தலைவர்கள் ஒன்றியம்!

Wednesday, March 12, 2014
இலங்கை:::மேலைத்தேய நாடுகள் உலகின் மூன்றாம் நிலை நாடுகளின் அபிவிருத்திக்கும் சமாதானத்துக்கும் குத்தகம் விளைவிக்கின்றது.
 
உயிரிழந்த புலிகளின் தலைவர்  பிரபாகரனுக்கு மீளவும் மூச்சு வழங்கி உயிர் கொடுத்து இனவாதத்தை போஷித்து இந்நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்வதிலேயே சர்வதேசம் உன்னிப்பாக செயல்படுகின்றது என்று ஐக்கியத்திற்கான சர்வமத தலைவர்கள் ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது.
 
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவ்வொன்றியம் இவ்வாறு தெரிவித்தது.
 
யுத்த காலங்களில்  புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் தொடர்பில் ஐ.நா.விசாரணை எதனையும் நடத்தவில்லை. இருப்பினும் இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணை பக்கச்சார்பானது எனவும் அவ்வொன்றியம் குற்றஞ்சாட்டியது.
 
 

No comments:

Post a Comment