Saturday, March 15, 2014

புலி­களின் சிங்­கள மக்­க­ளுக்கு எதி­ரான மிலேச்­சத்­த­ன­மான நட­வ­டிக்­கையை வெளி­யிட வேண்டி நேரிடும். நிஷாந்த ஸ்ரீ வர்­ண­சிங்க!

விக்­கி­னேஸ்­வ­ரனும் மனோ கணே­சனும் முன்வைக்கும் குற்­றச்­சாட்­டுக்கள் மீண்டும் நாட்­டுக்குள் தமிழ் அடிப்­ப­டை­வா­தத்தை ஊக்­கு­விப்­ப­தாக உள்­ளது என தெரி­வித்த ஜாதிகஹெல உறு­ம­யவின் தேசிய அமைப்­பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்­ண­சிங்க இவர்கள் இரு­வரும் சர்­வ­தேச சதி­கா­ரர்­க­ளுக்கு நாட்டை காட்டிக் கொடுப்­ப­தா­கவும் தெரி­வித்தார்.
 
இது தொடர்­பாக நிஷாந்த ஸ்ரீ வர்­ண­சிங்க மேலும் தெரி­விக்­கையில்
 
கடந்த 8 ஆம் திகதி சர்­வ­தேச மகளிர் தின நிகழ்வு வடக்கில் நடை­பெற்­றது.
 
இதில் கலந்து கொண்ட முத­ல­மைச்சர் வடக்கில் தமிழ் பெண்கள் இரா­ணு­வத் தால் கடத்­தப்­ப­டு­வ­தா­கவும் பாலியல் வன்­மு­றை­க­ளுக்கும் அடக்கு முறை­க­ளுக்கும் உள்­ளாக்­கப்­ப­டுவதாகவும் தெரி­வித்­த­தோடு வடக்­கி­லி­ருந்து இரா­ணுவம் வெளி­யேற வேண்­டு­மென்றும் தெரி­வித்­தி­ருந்தார். சர்­வ­தேச மகளிர்தினத்தில் விக்கி­னேஸ்­வரன் இவ்­வா­றான கருத்தை வெளி­ யிட்­ட­மைக்கு காரணம் அச்­செய்தி வெளி­நா­டு­க­ளுக்கு சென்­ற­டைய வேண்டும் என்­பதற்­கா­கவே ஆகும்.
 
அர­சாங்கம் சிங்­கள மக்­களின் வரிப்­ப­ணத்தில் அமைத்­துக் ­கொ­டுத்த வீதியில் வாக­னத்தில் சொகு­சாக பயணம் செய்யும் கொழும்பில் சொகுசு வாழ்க்கை அனு­ப­விக்கும் விக்கி­னேஸ்­வரன் வாரத்­துக்கு ஒரு தடவை வட­ப­கு­திக்கு சென்று இவ்­வா­றான கருத்­துக்­களை வெளி­யி­டு­கின்றார். எந்­த­வி­த­மான சாட்­சி­யங்­களோ அடிப்­ப­டையோ இல்­லாமல் பொய்கூறு­கிறார்.
 
அதே­போன்று கொழும்பில் மனோகணே­சனும் வடக்கில் ஆண்­பிள்­ளை­களை பறி­ கொ­டுத்த தாய்மார் இன்று தமது பெண்பிள்­ளை­களை பாது­காத்து தரு­மாறு படை­யி­ன­ரிடம் மன்­றா­டு­வ­தாக கூறு­கிறார்.
 
இதன் மூலம் விக்கி­னேஸ்­வ­ரனும் மனோ வும் மீண்டும் நாட்­டுக்குள் தமிழ் அடிப்­ப­டை­வா­தத்தை ஊக்­கு­விக்­கின்­றனர். அத்­தோடு தாய் நாட்­டுக்கு எதி­ரான சர்­வ­தேச அதி­கா­ரங்­க­ளுக்கு துணை போகின்­றனர்.
 
எனவே, நாட்­டுக்குள் மீண்டும் பழைய நிலை­மையை ஏற்­ப­டுத்த முயற்­சிக்க வேண்டாம்.
 
அப்­படி முயற்­சித்தால் நாமும் விடு­தலைப் புலி­களின் சிங்­கள மக்­க­ளுக்கு எதி­ரான மிலேச்­சத்­த­ன­மான நட­வ­டிக்­கையை வெளி­யிட வேண்டி நேரிடும் என்றும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.

No comments:

Post a Comment