Monday, March 31, 2014

இன மத பேதங்களைக் களைந்து மக்கள் அரசாங்கத்தை வெற்றி பெறச் செய்துள்ளனர்- பிரதமர் ஜயரட்ன!

Monday, March 31, 2014
இலங்கை::
இன மத பேதங்களைக் களைந்து மக்கள் அரசாங்கத்தை வெற்றி பெறச் செய்துள்ளதாக பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார். இன, மத, கட்சி பேதமின்றி நாட்டின் அனைத்து மக்களும் இம்முறை மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு ஆதரவளித்துள்ளனர்.
 
பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னர், நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய அபிவிருத்தியை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். சில தரப்பினர் நாட்டை துண்டாடுவதற்கு முயற்சிக்கின்றனர். எனினும், நாட்டை நேசிக்கும் பலர் அதனை எதிர்க்கின்றார்கள் என்பது தேர்தல் முடிவுகள் மூலம் வெளிச்சமாகியுள்ளது.
 
ஜனாதிபதியினால் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் நல அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என பிரதமர் ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment