Monday, March 31, 2014

அமெ­ரிக்­காவின் தீர்­மானம்: சர்­வ­தேச விசா­ரணை என்ற பேச்­சுக்கே இட­மில்லை: ஜனா­தி­ப­தியின் பேச்­சாளர் மொஹான் சம­ர­நா­யக!

Monday, March 31, 2014
இலங்கை::ஜெனி­வா
நவ­நீ­தம்­பிள்ளை தலை­மை­யி­லான சர்­வ­தேச விசா­ரணை என்ற பேச்­சுக்கே இட­மில்லை. இதனை இலங்கை அர­சாங்கம் முழு­மை­யாக நிரா­க­ரிக்­கின்­றது என ஜனா­தி­ப­தியின் பேச்­சாளர் மொஹான் சம­ர­நா­யக தெரி­வித்தார்.
மாகாண சபைத் தேர்தல் முடி­வுகள், வெளி­நா­டு­களின் அழுத்­தங்கள் தொடர்­பாக ஆராய்ந்து ஜெனிவாவில் அடுத்த கட்ட நட­வ­டிக்கை தொடர்­பாக அர­சாங்கம் முடி­வெ­டுக்­கு­மென்றும் அவர் கூறினார்.
ஜெனி­வாவில் அமெ­ரிக்­காவின் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது தொடர்பில் அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு தொடர்­பாக கருத்து தெரி­விக்­கை­யி­லேயே ஜனா­தி­ப­தியின் பேச்­சாளர் மொஹான் சம­ர­நா­யக இவ்­வாறு தெரித்தார்.
இது தொடர்­பாக அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,
ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் இலங்­கைக்கு எதி­ராக கொண்டு வரப்­பட்ட பிரே­ர­ணை­யா­னது அர­சியல் நோக்கம் கொண்­ட­தாகும்.
அது மட்­டு­மல்­லாது தமிழ், சிங்­கள முஸ்லிம், கிறிஸ்­தவ மக்­க­ளி­டையே தேசிய நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் அர­சாங்­கத்தின் முயற்­சி­க­ளுக்கும் இப்­பி­ரே­ர­ணை­யா­னது முட்­டுக்­கட்டை போடு­வ­தா­கவே உள்­ளது.
முப்­பது வருட கால யுத்­தத்தின் பின்னர் அர­சாங்கம் பல பிரி­வு­க­ளாக மீள் கட்­ட­மைப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கி­றது.
முத­லா­வ­தாக, இடம்­பெ­யர்ந்த மக்­க­ளுக்கு வாழ்­வி­டங்­களை அமைத்துக் கொடுத்து அடிப்­படை வச­தி­களை ஏற்­ப­டுத்திக் கொடுப்­பதில் அர­சாங்கம் கவனம் செலுத்­தி­யது.
தற்­போது அனைத்து இனங்­க­ளுக்கும் இடையே தேசிய நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றது.
அவ்­வா­றா­னதோர் சூழ்­நி­லையில் ஜெனீ­வாவில் இலங்­கைக்கு எதி­ராக பிரே­ர­ணையை நிறை­வேற்­றி­ய­தா­னது தேசிய நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் அரசின் முன்­னெ­டுப்­புக்­க­ளுக்கு முட்­டுக்­கட்­டை­யாக அமைந்­துள்­ளது.
அதேவேளை, இலங்­கையின் தமிழ் மக்­களின் நலன்­களில் இந்­தியா அதிக அக்­கறை கொண்­டுள்­ளது.
எனவே தான் இலங்கை அர­சாங்கம் இனங்­க­ளி­டையே நல்­லி­ணக்­கத்தை ஏற்­படுத்தும் முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­வதால் அதற்கு ஒத்­து­ழைப்பு வழங்க வேண்­டு­மென்றும் இலங்கை அர­சாங்கம் தமது நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க சந்­தர்ப்­பங்­களை வழங்க வேண்­டு­மெனக் கூறி ஜெனி­வாவில் வாக்­க­ளிப்­ப­தி­லி­ருந்து விலகிக் கொண்­டது.
உண்­மை­யி­லேயே இது தமிழ் மக்­களின் நலன்­களைக் கருத்தில் கொண்ட தீர்­மா­ன­மாகும். 
நவ­நீ­தம்­பிள்ளை ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் ஆணை­யாளர் நாயகம் நவ­நீ­தம்­பிள்ளை பக்­கச்­சார்பு கொண்­டவர்.
எனவே அவர் தலை­மை­யி­லான சர்­வ­தேச விசா­ரணை என்ற பேச்­சுக்கே இட­மில்லை.
அத்­தோடு இறை­யாண்மை கொண்ட நாடென்ற ரீதியில் சர்­வ­தேச விசா­ர­ணையை நிரா­க­ரிக்­கின்றோம். இதுவே அர­சாங்­கத்தின் நிலைப்­பா­டாகும்.
நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தல் முடி­வு­க­ளோடு 2012ம் 2013 ஆம் ஆண்டு தேர்­தல்கள் முடி­வு­களை ஒப்­பீடு செய்து பார்ப்­ப­தோடுஇ வெளி­நாட்டு அழுத்­தங்கள் பொரு­ளா­தார விட­யங்கள் தொடர்­பாக ஆராய்ந்து அடுத்த ஜெனிவா கூட்டத் தொட­ருக்கு முகம் கொடுப்­பது தொடர்பில் தீர்­மானம் எடுக்­கப்­ப­டு­மென்றும் மொஹான் சமரநாயக தெரிவித்தார்.

No comments:

Post a Comment