Wednesday, March 5, 2014

இலங்கையில் உள்ளக பொறிமுறைமை ஒன்றின் மூலம் நிரந்தரமான தீர்வுத் திட்டத்தை எட்ட ஆதரவளிக்கப்படும்: தென் ஆபிரிக்கா!

Wednesday, March 05, 2014
இலங்கை::இலங்கையில் உள்ளக பொறிமுறைமை ஒன்றின் மூலம் நிரந்தரமான தீர்வுத் திட்டம் ஒன்றை எட்டுவதற்கு பூரண ஆதரவளிக்கப்படும் என தென் ஆபிரிக்கா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 25ம் அமர்வுகளில் உரையாற்றிய தென் ஆபிரிக்க சர்வதேச விவகார அமைச்சர் எமலி நிகோனா மாஷபானே இதனைத் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைப் பேரவையில் இலங்கை விவகாரம் சில காலமாக தேங்கிக் கிடப்பதாகத் தெரிவித்துள்ளார். உள்ளக பொறிமுறைமை ஒன்றை அமைத்து அதன் மூலம் தீர்வுகளை எட்ட இலங்கைக்கு சர்வதேச சமூகம் வாய்ப்புக்களை வழங்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். எமது பிரச்சினைகளுக்கு நாமே உள்ளக பொறிமுறைமை ஒன்றின் தீர்வுகளை எட்டியதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment