Wednesday, February 26, 2014

முகநூல் சமூக வலையமைப்பு பயன்பாட்டை தடை செய்வது நடைமுறைச் சாத்தியமற்றது: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Wednesday, February 26, 2014
இலங்கை::முகநூல் சமூக வலையமைப்பு பயன்பாட்டை தடை செய்வது நடைமுறைச் சாத்தியமற்றது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிரிவெனாக்களிலும் முகநூல் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் எனவும் தடை விதிப்பது ஆபத்துக்களை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளைகளின் நன்னடத்தையை உறுதி செய்ய வேண்டியது பெற்றோரின் கடமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர் யுவதிகளுக்கு மத்தியில், சமூக வலையமைப்பு தொடர்பில் போதியளவு தெளிவின்மையே அண்மையில் இடம்பெற்ற துரதிஸ்டவசமான சம்பவங்களுக்கான பிரதான ஏதுவெனக் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை மாணவ மாணவியர் மட்டுமன்றி பிரிவெனாக்களி;ல் பயிலும் இளம் பௌத்த பிக்குகளும் சமூக வலையமைப்பு பயன்பாடு பற்றிய தெளிவுடன் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment