Wednesday, February 26, 2014

ஜெனீ­வாவில் இலங்­கைக்­கெ­தி­ரான நிலை­ப்பாட்­டையே இந்­தியா மேற்­கொள்ளும்: வசந்த பண்­டார!

Wednesday, February 26, 2014இலங்கை::இலங்­கையில் மீண்டும் பிரி­வி­னை­வா­தத்தை, ஆயுத பயங்கரவாதத்தை உயிர்ப்­பிப்­பதில் பின்­னிற்­கப்­போ­வ­தில்­லை­யென்ற செய்­தியை ராஜீவ் காந்தி கொலை­யா­ளி­களை விடு­வித்­ததன் மூலம் தமிழக முத­ல­மைச்சர் ஜெய­ல­லிதா வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார் என தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் பொதுச்­செ­ய­லாளர் டாக்டர் வசந்த பண்­டார தெரி­வித்தார்.
 
ஜெனீ­வாவில் இலங்­கைக்­கெ­தி­ரான நிலை­ப்பாட்­டையே இந்­தியா மேற்­கொள்ளும் என்றும் அவர் தெரி­வித்தார்.இது தொடர்­பாக தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் பொதுச்­செ­ய­லாளர் டாக்டர் வசந்த பண்­டார மேலும் தெரி­விக்­கையில்; இந்­தி­யாவில் பொதுத்­தேர்தல் நடை­பெ­ற­வுள்­ளது. இந்­நி­லை­யல் மத்­தியில் ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு தமிழ் நாட்டு அர­சியல் ஆத­ரவு அதிக தாக்­கத்தை செலுத்­து­கின்­றது. இதனைப் பயன்­ப­டுத்தி தமிழ் நாட்டு அர­சியல் சக்­திகள் தமது பேரம் பேசும் வேலையை ஆரம்­பித்­து­விட்­டது.
அத்­தோடு தமிழ் நாட்டு மக்­க­ளி­னதும் புலி ஆத­ர­வா­ளர்­க­ளி­னதும் வாக்­கு­களை கொள்­ளை­ய­டிப்­ப­தற்­கா­கவே ராஜீவை கொலை செய்த கொலை­யா­ளி­களை தமி­ழக முதல் அமைச்சர் ஜெய­ல­லிதா விடு­தலை செய்­துள்ளார்.இது மத்­தியில் ஆட்­சி­யி­லுள்ள காங்­கிரஸ் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கும் நெருக்­க­டி­களை தோற்­று­வித்­துள்­ளது.
 அத்­தோடு ஜெனீ­வாவில் இலங்­கைக்கு எதி­ராக இந்­திய மத்­திய அர­சாங்கம் அழுத்­தங்­களை பிர­யோ­கிக்க வேண்­டு­மென்றும் அத­னூ­டாக மறை­மு­க­மான அழுத்­தமும் பிர­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளது.
அது மட்­டு­மல்­லாது ஜெய­ல­லி­தாவின் விடு­த­லைக்­கான அறி­விப்­பா­னது இலங்­கைக்கும் ஆபத்­தான எச்­ச­ரிக்­கையை விடுத்­துள்­ளது. அதுதான் இந்­தி­யாவின் விசே­ட­மாக தமிழ்­நாட்டின் தேவை­களை இலங்கை அர­சாங்கம் நிறை­வேற்­றாவிட்டால் மீண்டும் இலங்­கையில் ஆயு­த­மேந்­திய பிரி­வி­னை­வாத பயங்­க­ர­வா­தத்தை உயிர்ப்­பிக்­கவும் பின்­னிற்­க­மாட்டோம் என்ற ஆபத்து சமிக்­ஞை­வி­டு­விக்­கப்­பட்­டுள்­ளது.ராஜீவை கொலை செய்த 7 பேர் விடு­தலை செய்­யப்­பட்­டதால் பிர­பா­கரன் நிர­ப­ராதி ஆகி­வி­ட­மாட்டார்.
 ஏனென்றால் இந்­திய உச்ச நீதி­மன்றம் பிர­பா­க­ரனை கொலைக்­குற்­ற­வா­ளி­யாக தீர்ப்பளித்துள்ளது.அத்தோடு தற்போது விடுதலை செய்யப்படவுள்ள 7 குற்றவாளிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படுகிறதே தவிர குற்றங்களிலிருந்து முழுமையாக விடுதலை செய்து தீர்ப்பளிக்கப்படவில்லை என்றும் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.
 

No comments:

Post a Comment