Thursday, February 27, 2014

பிரதியமைச்சர் சரத் அமுனுகம இன்று முதல் எதிர்வரும் மார்ச் 5 ஆம் திகதி வரை இந்தியா மற்றும் எத்தியோப்பிய நாடுகளுக்கு விஜயம்!

Thursday, February 27, 2014
இலங்கை::நிதி மற்றும் தி;ட்டமிடல் பிரதியமைச்சர் சரத் அமுனுகம இன்று முதல் எதிர்வரும் மார்ச் 5 ஆம் திகதி வரை இந்தியா மற்றும் எத்தியோப்பிய நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பிரதிநிதியாகவே அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2 ஆம் திகதி வரை இந்தியாவிலும், 5 ஆம் திகதிவரை எத்தியோப்பியாவிலும் பயணங்களை மேற்கொண்டு உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

இந்த பயணங்கள் காரணமாக அமைச்சரின் இன்றைய ஜெர்மனிக்கான விஜயம் ரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

No comments:

Post a Comment