Saturday, January 11, 2014

இலங்கை தொடர்­பி­லான சர்­வ­தேச விசா­ரணை என்ற பேச்­சுக்கே இட­மில்லை: அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார!

Saturday, January 11, 2014
இலங்கை::இலங்கை தொடர்­பி­லான சர்­வ­தேச விசா­ரணை தேவை­யென்ற வலி­யு­றுத்­தலை கடு­மை­யாக எதிர்க்­கின்றேன். இது அவ­சி­ய­மற்­றது மட்­டு­மல்ல எமது நாட்டின் இறை­யாண்­மையை மீறும் செய­லாகும் என அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார்.
எமக்கு எதி­ராக பொரு­ளா­தா­ரத்­தடை விதிக்­கப்­ப­டு­மானால் அது எமது பொரு­ளா­தா­ரத்தை பாதிக்கும் என்றும் அமைச்சர் தெரி­வித்தார்.
எமக்கு மறைப்­ப­தற்கு எது­வுமே இல்லை. எவரும் இங்கு வந்து அனைத்­தையும் பார்­வை­யி­டலாம். அதற்­கான கத­வுகள் திறந்தே உள்­ளன என்­பதே ஜனா­தி­ப­தியின் கொள்­கை­யாகும்.
அதற்­க­மை­யவே அமெ­ரிக்­காவின் விசேட பிர­தி­நிதி ஸ்டீபன் ராப்­புக்கும் அனு­மதி வழங்­கப்­பட்­டது. அவ்­வாறு வந்­த­வர்கள் குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­தலாம்.
ஐ.நா மனித உரிமை ஆணைக்­குழு மாநாட்டில் எமக்­கெ­தி­ராக அமெ­ரிக்க பிரே­ர­ணை­களை சமர்ப்­பிக்­கலாம். ஆனால், அதற்கு எம்மால் பதில்­களை வழங்க முடியும். அதற்குத் தயா­ரா­கவே இருக்­கின்றோம்.
நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரைகள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றதா உட்­பட வேறு பல விட­யங்­களை வெளி­நா­டு­களால் கண்­கா­ணிக்க முடியும்.
ஆனால், எங்கள் விட­யங்­களை சர்­வ­தேச ரீதியில் விசா­ரணை செய்ய முடி­யாது. அதற்கு இட­ம­ளிக்க முடி­யாது. சர்­வ­தேச விசா­ரணை என்ற பேச்­சுக்கே இங்கு இட­மில்லை. அதனைக் கடு­மை­யாக எதிர்க்­கின்றேன். இது எமது நாட்டின் இறை­யாண்­மையை மீறும் செய­லாகும்.
ஐ.நா சபையால் பொரு­ளா­தா­ரத்­தடை விதிக்க முடி­யாது. மாறாக அமெ­ரிக்கா உட்­பட வேறு நாடுகள் தாம் நினைத்தால் பொரு­ளா­தாரத் தடைகள் விதிக்­கலாம். அவ்­வா­றான தடைகள் விதிக்­கப்­ப­டு­மானால் எமது பொரு­ளா­தாரம் பாதிக்கும்.
யாழ்.மன்னார் ஆயர்­க­ளுக்கு அவர்­க­ளது நிலைப்பாட்டை தெரிவிக்கும் உரிமையுண்டு. அதேவேளை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் உரிமை எமக்கு உள்ளது என்று  வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

No comments:

Post a Comment