Tuesday, December 31, 2013

புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணும் புலி ஆதரவாளர்கள், வெளிநாட்டு ராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள் யாழ் குடாநாட்டிற்கு விஜயம்??

Tuesday, December 31, 2013
இலங்கை::
புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணும் புலி ஆதரவாளர்கள், வெளிநாட்டு ராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள் யாழ் குடாநாட்டிற்கு விஜயம்.
 
புலிகளின் ஆதரவு கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதீகா சிற்சபேசன் உண்மையைக் கண்டறியும் நோக்கில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளன. எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக அழுத்தங்களை பிரயோகிக்கும் முனைப்பின் ஒர் கட்டமாக இந்த விஜயம் கருதப்பட வேண்டுமென தெரிவித்துள்ளன.

புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணும் புலி ஆதரவாளர்கள், வெளிநாட்டு ராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாண குடாநாட்டிற்கு விஜயங்களை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
 
 
மனித உரிமைப் பேரவை அமர்வுகளை இலக்கு வைத்து சுற்றுலா வீசாவில் நாட்டுக்குள் பிரவேசித்து இவ்வாறு யாழ்ப்பாண குடாநாட்டிற்கு விஜயம் செய்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

ராதீகா சிற்சபேசன்  புலி ஆதரவு அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவவர் .


 
ஆளும் கட்சியின் சார்பில் அண்மையில் தீபக் ஒபராய் இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததாகவும், அதற்கு போட்டியாகவே எதிர்க்கட்சியின் சார்பில் புலி ஆதரவு ராதீகா சிற்சபேசன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment