Tuesday, December 17, 2013
இலங்கை::ஆப்கானிஸ்தான் மற்றும் சீசெல்ஸ் ஆகிய நாடுகளில் புதிய தூதரகங்கள் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் தூதரகமும் சீசெல்ஸின் விக்டோரியா நகரில் உயர்ஸ்தானிகராலயமும் ஆரம்பிக்கப்பட உள்ளன.
இலங்கை வெளிவிவகார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டில் நைஜீரியா, உகண்டா ஆகிய நாடுகளில் உயர்ஸ்தானிகராலயங்களும் பஹ்ரெய்னில் தூரகமொன்றையும் அரசாங்கம் ஆரம்பித்திருந்தது.
இதற்கு மேலதிகமாக எதிர்வரும் ஆண்டு இந்தியாவின் கல்கத்தாவில் கொன்சியூல் காரியாலயமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

No comments:
Post a Comment