Tuesday, December 31, 2013

இலங்கைக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் யாழ்ப்பாணத்தில் த.தே.கூட்டமைப்புடன் சந்தித்து பேசவுள்ளார்!

Tuesday, December 31, 2013
இலங்கை::இலங்கைக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்துப் பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைக்கான தென்னாபிரிக்க தூதுவர் ஜாஃப்ரி டாய்ட்ஜ்(Geoffrey Doidge), கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் யாழ்ப்பாணத்தில் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
 
இவர் நல்லூர் கந்தசாமி கோவில், வல்லிபுர ஆழ்வார் கோவில், மற்றும் நயினாதீவு ஆகிய இடங்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார். யாழ். கோட்டை, பொது நூலகம் உள்ளிட்ட யாழ்ப்பாணத்தின் முக்கியமான இடங்களுக்கும் அவர் சென்று பார்வையிட்டுள்ளார்.
 
யாழ்ப்பாணம் சென்றுள்ள தென்னாப்பிரிக்கத் தூதுவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் 
  தெரிவித்துள்ளார்
 
இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவது தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு, வடக்கு மாகாண சபையின் நிர்வாகம், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆகியன குறித்து தென்னாப்பிரிக்கத் தூதுவர் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்ப்பதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment