Tuesday, November 26, 2013
பாங்காங்::தாய்லாந்தில் ஆட்சிக்கெதிரான போராட்டம் வலுக்கிறது. பிரதமர் பதவி விலக வலியுறுத்தி எதிர்கட்சியினர் அமைச்சரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அங்கு எமர்ஜென்சி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் பெண் பிரதமர் யிங்லுக் சினவத்ரா தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2006ம் ஆண்டு பிரதமராக இருந்த அவரது சகோதரர் தக்ஷின் சினவத்ராவை வலுக்கட்டாயமாக பதவியில் இருந்து தூக்கி வீசிவிட்டு சினவத்ரா ஆட்சியை பிடித்தார். அவரும், அவரது குடும்பத்தினரும் ஆட்சியை தங்கள் குடும்ப வசம் வைத்திருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. சினவத்ராவுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும், அரசியல் குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் சட்ட மசோதவை சினவத்ரா கொண்டு வந்தார். இதற்கும் எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அவர், பிரதமர் பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் நேற்று தலைநகர் பாங்காக் நகரில் பேரணியாக திரண்டனர். அவர்கள் அங்கு நிதியமைச்சகம் மற்றும் வெளியுறவு துறை அமைச்சகம் ஆகியவற்றின் முன்பாக திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். போலீசாரின் தடுப்புகளை தாண்டி 2 அமைச்சகங்களின் வாயிற்கதவுகளையும் உடைத்து நொறுக்கினர். பின்னர் அலுவலகத்துக்குள் புகுந்து ஊழியர்களை அடித்து உதைத்தனர். இதுகுறித்து முன்னாள் எம்பி சுதேப் தவுக்சுபன் கூறுகையில், அடுத்தகட்டமாக அனைத்து அமைச்சகங்களையும் கைப்பற்றுவோம் என்று கூறினார்.
தாய்லாந்தில் பெண் பிரதமர் யிங்லுக் சினவத்ரா தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2006ம் ஆண்டு பிரதமராக இருந்த அவரது சகோதரர் தக்ஷின் சினவத்ராவை வலுக்கட்டாயமாக பதவியில் இருந்து தூக்கி வீசிவிட்டு சினவத்ரா ஆட்சியை பிடித்தார். அவரும், அவரது குடும்பத்தினரும் ஆட்சியை தங்கள் குடும்ப வசம் வைத்திருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. சினவத்ராவுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும், அரசியல் குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் சட்ட மசோதவை சினவத்ரா கொண்டு வந்தார். இதற்கும் எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அவர், பிரதமர் பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் நேற்று தலைநகர் பாங்காக் நகரில் பேரணியாக திரண்டனர். அவர்கள் அங்கு நிதியமைச்சகம் மற்றும் வெளியுறவு துறை அமைச்சகம் ஆகியவற்றின் முன்பாக திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். போலீசாரின் தடுப்புகளை தாண்டி 2 அமைச்சகங்களின் வாயிற்கதவுகளையும் உடைத்து நொறுக்கினர். பின்னர் அலுவலகத்துக்குள் புகுந்து ஊழியர்களை அடித்து உதைத்தனர். இதுகுறித்து முன்னாள் எம்பி சுதேப் தவுக்சுபன் கூறுகையில், அடுத்தகட்டமாக அனைத்து அமைச்சகங்களையும் கைப்பற்றுவோம் என்று கூறினார்.
பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சட்டம் ஒழுங்கை மதித்து பொதுமக்கள் நடக்க வேண்டும் என்று சினவத்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார். எனினும் நிலைமை மோசமானதை தொடர்ந்து அவசர நிலை பிரகடனப்படுத்தி உத்தரவிட்டுள்ளார்.


No comments:
Post a Comment