Friday, November 29, 2013

இலங்கை கரையோரப்பாதுகாப்புக் குழு கடல்சார் ஒத்துழைப்பு தொடர்பான நிகழ்ச்சியில் பங்குகொள்வதற்காக ஜப்பானுக்கு விஜயம்!

Friday, November 29, 2013
இலங்கை::ஐந்து பேரடங்கிய இலங்கை கரையோரப்பாதுகாப்புக் குழு கடல்சார் ஒத்துழைப்பு தொடர்பான நிகழ்ச்சியில் பங்குகொள்வதற்காக ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.
 
கடந்த மார்ச் மாதம் ஜப்பானுக்கு விஜயம் செய்த ஜனாதிபதியவர்கள் ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபேயுடனான சந்திப்பின்போது இரு நாடுகளுக்குமிடையே தேவைப்படும் கரையோரப்பாதுகாப்பின் ஆற்றலை மேம்படுத்தல்,கடல்சார் சட்டங்களை அமுல் படுத்துதல்,
 
அணர்த்தங்களிலிருந்து பாதுகாத்தல்,சூழலைப்பாதுகாத்தல் போன்றவற்றின் முக்கியத்துவத்துவம் குறித்து கலந்தாலோசித்த்தன்பிரகாரம் இக்குழு ஜப்பானுக்கு சென்றுள்
ளது.
 
கரையோரப்பாதுகாப்புப் படையின் பிரதிப்பணிப்பாளர் நாயகம் ஏ.கே குருகே தலைமையிலான இக்குழுவானது ஜப்பானிய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள், ஜப்பானிய கரையோர பாதுகாப்புப்படை அதிகாரிகள், போன்றோர்களைச் சந்தித்ததுடன் கடல்சார் சட்டங்களை அமுல்படுத்துதல் தொடர்பாக உடன்பாடும் கண்டனர்.
 
இக்குழுவானது ஜப்பானிய கரையோரப்பாத்துகாப்பு தலைமையகம், ஜப்பானிய கடல்சார் பாதுகாப்புப் படை முகாம்,காணி, போக்குவரத்து மற்றும் உல்லாசத்துறை அமைச்சுக்கள் போன்றவற்றுக்குச்செல்ல உள்ளதுடன் இன்னும் பலஇடங்களுக்கும் விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.மேலும் அவர்கள் இலங்கைத்தூதுவரையும் ஜப்பானில் சந்தித்தனர்

No comments:

Post a Comment