Friday, November 29, 2013

புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தைக் கணக்கெடுக்க முடியாது. அவரது குடும்பத்தில் யாரும் உயிருடன் இல்லை: டி.டபிள்யு.டி.குணவர்த்தன!


Friday, November 29, 2013
இலங்கை::புலிகளின் தலைவர்  பிரபாகரனின் குடும்பத்தைக் கணக்கெடுக்க முடியாது. அவரது குடும்பத்தில் யாரும் உயிருடன் இல்லை என புள்ளி விபரவியல் மற்றும் தொகை மதிப்பீட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டி.டபிள்யு.டி.குணவர்த்தன தெரிவித்தார்.
 
போரில் ஏற்பட்ட இழப்புக்களை கணக்கெடுக்கும் நடவடிக்கை நேற்று நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ளது என்றும் அவர் கூறினார்.
 
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைவாக 1983 ஆம் ஆண்டு முதல் 2009 மே வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சொத்தழிவு, உயிரிழப்பு, காணாமற் போனவர்கள் தொடர்பில் கணக்கெடுக்கும் பணிகளை புள்ளிவிவரவியல் மற்றும் தொகை மதிப்பீட்டுத் திணைக்களம் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ளது என .டி.டபிள்யு.டி.குணவர்த்தன தெரிவித்தார்

No comments:

Post a Comment