Friday, November 29, 2013

இலங்கை மனித உரிமைகளை மீறிய குற்றம் சுமத்த முயற்சிக்கும் டேவிட் கமரூனின் மோசமான நிலைப்பாடுகளை அருவருக்கத்தக்கது: கும்புறுகமுவே வஜிர தேரர்!

Friday, November 29, 2013
இலங்கை::இலங்கை மனித உரிமைகளை மீறிய குற்றம் சுமத்த முயற்சிக்கும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் மோசமான நிலைப்பாடுகளை அருவருக்கத்தக்கது என்று கண்டிக்கின்றோம்.
 
சில மேற்குலக நாடுகள் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சுமத்தும் குற்றச்சாட்டுக்களை வன்மையாக கண்டிப்பதாக கலாநிதி கும்புறுகமுவே வஜிர தேரர் தெரிவித்தார்.
 
கொழும்பு பொதுநூலகத்தில் நேற்று நடைபெற்ற சர்வமத தலைவர்களின் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்
 
சனல் 4 தொலைக்காட்சி நாட்டுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கை நாட்டுக்கு செய்த துரோகம் என்றார்.
 
அதேவேளை இங்கு உரையாற்றிய ஜனாதிபதியின் மத விவகாரங்கள் தொடர்பான ஆலோசகர் கலகம தம்மரங்சி தேரர்,
 
1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னரும் பிரித்தானிய நாட்டை தனது காலனித்துவ நாடாகவே கருதி செயற்பட்டது.
 
அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூலம் அழுத்தங்களை ஏற்படுத்தியது. பயங்கரவாதத்தின் ஊடாக படுகொலைகளை நிகழ்த்த முயற்சிகளை மேற்கொண்டது. அந்த நிலைப்பாடுகள் பிரித்தானியாவிடம் இன்றும் இருக்கின்றன என்றார்.

No comments:

Post a Comment