Thursday, November 21, 2013

இலங்கைக்கு எதிரான தேசத்துரோக இனவாதிகளின் சதி வலைகளில் அப்பாவி தமிழ் பேசும் மக்கள் விழுந்துவிட வேண்டாம்: ஹூனைஸ் பாருக்!

Thursday, November 21, 2013
இலங்கை::இலங்கைக்கு எதிரான தேசத்துரோக செயற்பாடுகளுக்கான அடித்தளம் வேகமாக இடப்படுவதாக சுட்டிககாட்டிய பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக், இந்த இனவாதிகளின் சதி வலைகளில் அப்பாவி தமிழ் பேசும் மக்கள் விழுந்துவிட வேண்டாம் என்றும் கோறிக்கைவிடுத்துள்ளார். கடந்த 30 வருடம் எமது மக்கள் இழந்தவைகள் ஏராளம்.அவற்றில் முடியுமான சிலதையாவது பெற்றுக் கொள்ள முயற்சிளை செய்கின்ற போது மீண்டும் வடக்கில் இனரீதியான மோதல்களை ஏற்படுத்த பிழையான அனுகுமுறைகளை இவர்கள் கையாள்வதாக கூறினார்.
 
இந்திய வீடமைப்பு திட்டத்தை இலங்கை நாட்டில் குறிப்பாக வடக்கில் புலி பயங்கரவாதிகளினால் அழிக்கப்பட்ட மக்களது வாழ்க்கையினை கட்டியெழுப்பும் நோக்குடன் இந்திய அரசாங்கம் வழங்கிய வீடமைப்பு திட்டத் தெரிவு தொடர்பில் மக்களை பிழையாக நடத்தி இவறுமைப்பட்ட மக்களை வீதக்கு இறக்கி அபிவிருத்தியின் எதிராளிகள் இவர்கள் என்பதை காட்டிக் கொடுப்பு செய்யும் நிலையினை இவ்வாறான அரசியல் சக்திகள் செய்கின்றனர்.
 
வீடமைப்பு திட்ட தெரிவு தொடர்பில் வவுனியா பிரதேச செயலாளர் அவர்களிடம் கேட்டு பெற்றுக் கொள்வதை விடுத்து ஒரு சிறுபான்மை சமூகத்தின் மக்கள் பிரதி நிதியாக வடக்கில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்காவும் குரல் கொடுத்து அவர்களுக்காக இரவு பகல் ஓய்வின்றி செயற்படும் அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது இல்லாத பொல்லாதவற்றை இட்டுக்கட்டி அவரை ஊடகங்களின் விற்பனை பொருளாக மாற்றிவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நம்பகத்தன்மை மற்றும் வாக்குறுதிகள் தொடர்பில் நம்பகத்தன்மையினை கொள்ள முடியுமா என்ற கேள்வி இப்போது எழ ஆரம்பித்துள்ளது.
 
வடக்கில் தமிழ் சமூகத்தின் உரிமைகள் அவர்கள் சார்ந்தவர்களினாலும்இஅமைப்புக்களில் இருப்பவர்களினாலும் காட்டிக் கொடுப்புகளுக்கு உள்ளாக்கப்பட்ட பல சந்தர்ப்பங்களில் துணிந்து பேச வேண்டிய இடத்தில் பேசி அம்மக்களின் உரிமைகளுக்கு அழுக்கு ஏற்படவிடாமல் எமது கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமையிலான எமது அரசியல் அணியினர் செய்துவந்துள்ளனர்.அதனால் அதான் இன்று எம்முடன் தமிழ் சகோதரர்கள் ஒன்றுபட்டு பயணிததக் கொண்டிருக்கின்றனர்.
 
வெறும் வாய்ப்பேச்சும் இமக்களை குழுப்பும் வாசகங்களையும் வைத்துக் கொண்டு அரசியல் வியாபாரம் செய்பவர்களின் செயற்பாடுகள் வண்மைான கண்டனததுக்குரியதாகும் என்று தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக், யதாரத்தமும், உண்மையுமே என்றும் வெற்றி பெறும் என்றும் கூறியுள்ளார்

No comments:

Post a Comment