Thursday, November 21, 2013

2014 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது!

Thursday, November 21, 2013
இலங்கை::2014 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால்  பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 68ஆவது வரவு – செலவுத் திட்டமே  சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் சமர்ப்பிக்கப்படும் ஒன்பதாவது வரவு – செலவுத் திட்டம் இதுவென ஆளுங்கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள், புதிய வருமான மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள் உள்ளிட்ட பல யோசனைகள் வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக முன்வைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை முதல் இடம்பெறவுள்ளது.
அதன்பின்னர் எதிர்வரும் 29 ஆம் திகதிவரை, வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் காலை 9.30 முதல் மாலை 6.30வரை பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்த்தன கூறினார்.

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.

வரவு – செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதங்கள் டிசம்பர் 2ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதனைத் தொடர்ந்து வரவு – செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 20 ஆம் திகதி இடம்பெறுமென ஆளுங்கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குணவர்த்தன மேலும் தெரிவித்தார்.

>2014ம் ஆண்டு முதல் வௌிநாட்டவர்கள் இலங்கையில் குத்தகை அடிப்படையில் மாத்திரம் காணிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதற்காக 15% ஆரம்ப வரி அறவிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட உரையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
 
>விவசாய ஓய்வூதிய திட்டத்தை 2014 ஜனவரி தொடக்கம் செயற்படுத்துமாறு யோசனை முன்வைக்கிறேன், 63 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு 1250 ரூபா வீதம் விவசாய ஓய்வூதியம் வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

>இன்று பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட உரையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

2014 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறையை 5.2 வீதமாகவும், 2016ம் ஆண்டு 3.8 வீதமாகவும் குறைக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட உரையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment