Thursday, October 31, 2013

பல்­லா­யி­ரக்­க­ணக்­கான இரா­ணுவ வீரர்­களையும் சொத்­துக்­க­ளையும் இழந்து பெற்ற வெற்­றி­யையும் பாது­காத்து வரும் நாட்­டி­னையும் புலிகள் ஆதரவு பிரி­வி­னை­வா­தி­களின் கைகளில் கொடுக்க நாம் தயா­ரா­க­வில்லை: குண­தாச அம­ர­சே­கர!

Thursday, October 31, 2013
இலங்கை::நாட்டில் அர­சாங்­கத்தை தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக சிங்­கள மக்­களே உள்­ளனர். சிங்­க­ள­வர்­களை பகைத்துக் கொண்டு அர­சாங்­கத்­தினால் எதையும் செய்­ய­மு­டி­யாது. நாட்டில் சமா­தா­னமும் அமை­தியும் நில­வ­வேண்டும் என்­ப­தற்­கா­கவே சிறு­பான்­மை­யி­னரை ஆத­ரித்துக் கொண்டு செயற்­ப­டு­கின்றோம் என தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் தெரி­வித்­துள்­ளது.
 
ஐக்­கிய தேசி­யக்­கட்சி சிறு­பான்­மை­யி­னரை ஆத­ரித்து ஆட்சி அமைக்­கலாம் என்ற நினைப்பில் செயற்­ப­டு­கின்­றது. இன்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் வீழ்ச்­சிக்கும் அவர்­களின் அர்த்­த­மற்ற கொள்­கை­களே காரணம் எனவும் அந்த அமைப்பு சுட்­டிக்­காட்­டி­யது.
 
இது தொடர்­பாக தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் தலைவர் குண­தாச அம­ர­சே­கர கருத்துத் தெரிக்­கையில்:-
 
இலங்­கையில் சிங்­கள மக்­களை பகைத்துக் கொண்டு எதிர்க்­கட்­சியால் அர­சாங்­கத்தை அமைக்­க­மு­டி­யாது. பெரும்­பான்­மை­யி­ன­மான சிங்­க­ள­வர்­களே இந்த நாட்டின் ஆட்­சி­யினை தீர்­மா­னிக்­கின்­றனர். இலங்­கையில் உள்ள சிறு­பான்மைக் கட்­சிகள் அனைத்­தையும் ஒன்­றி­ணைத்­தாலும் சிங்­கள மக்­களின் வாக்­குகள் அதி­க­மா­ன­தா­கவே உள்­ளன. இதனை புரிந்து கொண்­ட­தனால் தான் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் அர­சாங்கம் உறு­தி­யான ஒரு நிலையில் பல­மான ஆட்­சி­யினை அமைத்து அர­சாங்­கத்­தினை நடத்­து­கின்­றது.
 
எனினும் ஐக்­கிய தேசி­யக்­கட்சி சிறு­பான்மை மக்­களின் ஆத­ர­வினைப் பெற்று அவர்­க­ளி­­னூ­டாக ஆட்­சி­யினை அமைக்­கலாம் என நினைக்­கின்­றது. அதன் கார­ணத்­தி­னா­லேயே இன்று வடக்­கையும், வடக்கின் முத­ல­மைச்­சரைப் பற்­றியும் புக­ழாரம் சூட்டி வடக்கின் உரி­மை­களைப் பற்றி பேசிக் கொண்­டுள்­ளது.
 
இன்று வடக்கில் அமை­தியும் சமா­தா­னமும் நில­வு­கின்­றது. 30 வரு­டங்­க­ளாக இருந்த நிலைமை மாறி இன்று வடக்­கிலுள்ள அனைத்து மக்­களும் சுதந்­தி­ர­மாக செயற்­படும் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. எனினம் இதனை குழப்பி மீண்­டு­மொரு போர் சூழ­லினை உரு­வாக்­கவே ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் முயல்­கின்­றன.
 
உண்­மை­யி­லேயே இலங்கை இன்று அழுத்­தங்­களை சந்­திப்­ப­தற்கும் அன்று யுத்தம் ஒன்று ஏற்­ப­டு­வ­தற்கும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் புலிகள் ஆதரவு  தமிழ் பிரி­வி­னை­வாத கட்­சி­க­ளுமே கார­ண­மாகும். அப்­பாவி மக்­க­ளையும் சர்­வ­தேச சக்­தி­க­ளையும் குழப்பி நாட்டை பிரிப்­ப­தற்கு இவ் கட்­சிகள் துணை நிற்­கின்­றன.
 
பல்­லா­யி­ரக்­க­ணக்­கான இரா­ணுவ வீரர்­களையும் சொத்­துக்­க­ளையும் இழந்து பெற்ற வெற்­றி­யையும் பாது­காத்து வரும் நாட்­டி­னையும் புலிகள் ஆதரவு பிரி­வி­னை­வா­தி­களின் கைகளில் கொடுக்க நாம் தயா­ரா­க­வில்லை. யார் எவ்­வா­றான கருத்­துக்­களை முன்­வைத்­தாலும் ஜனாதிபதியின் முடிவு இறுதியானது.
 
வடக்கில் இருந்து கொண்டு விக்கினேஸ்வரன் எதை குறிப்பிட்டாலும் எந்தக் கட்டளைகளை பிறப்பித்தாலும் மத்திய அரசாங்கம் செவிமடுக்கப் போவ­தில்லை. நாட்டிற்கும் மக்களுக்கும் எது சிறந்ததோ அதையே அரசாங்கம் செய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.
 
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment