Thursday, October 31, 2013

வட­மா­காண சபை வெளி­நாட்டுச் சக்­தி­களின் உத­வி­யுடன் தனி இராட்­சியம் நோக்கிச் செல்ல முயன்றால் வடமேல் மாகாண சபை அதற்கு எதி­ராக செயற்­படும்: வடமேல் மாகாண முத­ல­மைச்சர் தயா­சிறி ஜய­சே­கர!

Thursday, October 31, 2013
இலங்கை::வட­மா­காண சபை வெளி­நாட்டுச் சக்­தி­களின் உத­வி­யுடன் தனி இராட்­சியம் நோக்கிச் செல்ல முயன்றால் வடமேல் மாகாண சபை அதற்கு எதி­ராக செயற்­படும் என வடமேல் மாகாண முத­ல­மைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார். மாகாண சபையின் மாதாந்த அமர்வில் உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
 
அவர் மேலும் கூறு­கையில்:-
 
வட­மா­காண சபையை உரு­வாக்­கி­யது ஜன­நா­யக ரீதியில் வெற்­றி­யாகும். அதேபோல் வடமேல் மாகாண சபையில் நாம் பல்­வேறு சவால்­க­ளுக்கு முகங்­கொ­டுத்து வெற்றி கண்­டுள்ளோம். எதிர்­கா­லத்தில் எமக்கு ஒரு இலக்கு இருக்க வேண்டும்.
 
மாகாணம் முழு­வதும் கிரா­மிய மக்­களின் அபி­வி­ருத்தி தொடர்­பாக நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும். மக்கள் சேவையின் போது கட்­சி­பே­த­மில்­லாமல் செயற்­ப­ட­வேண்டும். அந்த வகையில் குரு­ணாகல் மற்றும் புத்­தளம் ஆகிய மாவட்­டங்­களில் ஒரே வித­மாக அபி­வி­ருத்தி செய்­யப்­படும்.
 
அனைத்து அபி­வி­ருத்­தித்­திட்­டங்­களும் மக்­க­ளுக்கு நன்மை பயப்­ப­தாக அமைய உறுப்­பி­னர்கள் ஒத்­து­ழைக்க வேண்டும். சுற்­று­லாத்­துறை கற்­பிட்டி பிர­தே­சத்தில் அபி­வி­ருத்தி செய்­யப்­படும்.
 
இதே­வேளை இப்­ப­கு­தியில் சிறு­நீ­ரக நோய் அதி­க­ரித்து வரு­வதால் அதைத் தடுத்து தூய குடிநீர் வழங்கும் திட்­டங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன.
 
இதே­வே­ளையில் இப்­ப­கு­தியில் விளை­யாட்­டுத்­து­றையை மேம்­ப­டுத்தி திட­மான சமு­தா­ய­மொன்று உரு­வாக்க வழி­ய­மைக்­கப்­ப­ட­வுள்­ள­துடன் பாட­சா­லையில் இருந்து விலகும் மாண­வர்­க­ளுக்கு தொழிற் பயிற்­சிகள் வழங்­கப்­படும். மேலும் காட்டு யானை­களை கட்­டுப்­ப­டுத்­தவும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றார்.
 
எதிர்க்­கட்சித் தலைவர் ஜே.சீ. அல­வத்­து­வல உரை­யாற்­று­கையில், மாகாண சபைகள் பய­னற்­றவை எனக்­கூ­று­வது மக்­க­ளுக்குச் செய்யும் அகெ­ள­ர­வ­மாகும், புதிய முதல்வர் வடமேல் மாகா­ணத்­திற்கு உரித்­தான கொள்­கை­களை உரு­வாக்க வேண்டும். 25 வருட கால வர­லாற்றைக் கொண்ட வடமேல் மாகாண சபைக்கு போதிய கொள்கைச் சாச­னங்கள் இல்­லாமை கவ­லைக்­கு­ரி­யது. எதிர்க்­கட்சி என்ற வகையில் மக்­க­ளுக்கு நன்மை பயக்கும் திட்­டங்­களை நாம் வர­வேற்போம்.
 
வடமேல் மாகாண கல்­வித்­து­றையில் பல குறை­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. சுகா­தா­ரத்­துறை சீர­ழிந்து போயுள்­ளது. 75 வீத­மான மக்கள் விவ­சா­யத்தை நம்பி வாழ்­கின்­றனர். ஆனால் பல பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. விவ­சாய ஓய்­வூ­தியம் தொடர்­பாக கவ­ன­மெ­டுக்­க­வேண்டும். சிறு­கைத்­தொழில் அபி­வி­ருத்தி செய்ய வேண்டும். சிறு­நீ­ரக நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
 
வடமேல் மாகாண அபிவிருத்தி தொடர்பாக வடமேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களே தீர்மானம் எடுக்க வேண்டும். ஏனையவர்கள் தலையிடுவதை தடுக்க புதிய வடமேல் மாகாண முதல்வர் முன் வரவேண்டும் என்றார்.
 
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment