Friday, October 25, 2013

இராணுவத்தை வெளியேற்றுவதற்கும்-காவல்துறையினருக்கு உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரம் விக்னேஸ்வரனுக்கு கிடையாது: பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ!


Friday, October 25, 2013
இலங்கை::வட மாகாணசபையின் முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனால் காவல்துறையினருக்கு உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
வட மாகாணத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமைகளை பாதுகாக்கும் பொறுப்பு முதலமைச்சரைச் சாரும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
எனினும், காவல்துறையினருக்கு உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரம் விக்னேஸ்வரனுக்கு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அர்த்தமற்ற அறிக்கைகளை வெளியிடுவதனை தவிர்த்து சமாதானத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தவே முனைப்பு காட்ட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதற்காக மக்கள் ஆணை வழங்கவில்லை என்பதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment