Wednesday, October 23, 2013

மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச இளைஞர் கலந்துரையாடலில் இலங்கையின் சார்பில் 2 பெண்கள்!

Wednesday, October 23, 2013
இலங்கை::மலேசியா அரசு,ஆசிய இளைஞர்; அமைப்பு, மலேசிய இளைஞர்; அமைப்பு ,இளைஞர்; , விளையாட்டு அமைச்சு ,உலக இளைஞர் மன்றம் ஆகியவற்றுடன் ((way)) இணைந்து   வருடாந்தம் நடத்தும் சர்வதேச இளைஞர் கலந்துரையாடல் இம்முறையும் மலேசியாவில் நடைபெற்றது.

மலேசிய நாட்டின் மலாக்கா நகரிலுள்ள hang tuah world heritage ஹோட்டலில் இந்த சர்வதேச இளைஞர் கலந்துரையாடல் இடம்பெற்றது

இளைஞர்; வெளியேற்றம்: பாதுகாப்பான இடத்திலிருந்து ஓர்அடி” என்ற தொனிப்பொருளில் இந்த சர்வதேச இளைஞர் கலந்துரையாடல் (malacca international youth dialogue ) இடம்பெற்றது.

இதில் எகிப்து,இந்தியா, பாகிஸ்தான்,இலங்கை, நைஜீரியா, பங்களாதேஷ்,கானா,பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா,சீனா, மலேசியா, சூடான் ஆர்மேனியா போன்ற நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட இளைஞர்களும், இளைஞர் தலைவர்;களும் கலந்து தங்களது பங்களிப்பினை வழங்கி சிறப்பித்தனர்.

இலங்கையின் சார்பில் இளம் மாதர் முஸ்லிம் சங்கத்தின் (ywma) ஏற்பாட்டில் முஸ்லிம் மகளிர் கல்லூரி பழைய மாணவியான செல்வி அஸ்ரா ரிஸ்வியும்,இளம் மாதர் முஸ்லிம் சங்க இணைப்பாளராக பாயிஸா ஹமீதும் இந்த சர்வதேச இளைஞர் கலந்துரையாடலில் கலந்துக்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment