Monday, September 30, 2013

நாடளாவிய ரீதியிலுள்ள சகல தபால் காரியாலயங்களிலும் இருந்தும் தந்திச் சேவை நாளை முதலாம் திகதியுடன் விடைபெறுகிறது!

Monday, September 30, 2013
இலங்கை::நாடளாவிய ரீதியிலுள்ள சகல தபால் காரியாலயங்களிலும் இருந்தும் தந்திச் சேவை நாளை முதலாம் திகதியுடன் நிறுத்தப்படும் என்றும் தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்தார்.
 
இந்த சேவையை இடைநிறுத்துவதற்கு தபால் திணைக்களமும் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனமும் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
அதன் பிரகாரம் எந்தவொரு தபால் காரியாலங்களிலும் ‘தந்தி’ இனிமேல் பொறுப்பேற்கப்படமாட்டாது.
 
இலங்கையிலிருந்து தந்திச்சேவையை முழுமையாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்புகள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment