Thursday, September 12, 2013

இன்று நினைவுக்கூறப்படும் கைதிகளின் தினத்தை முன்னிட்டு சுமார் ஆயிரம் கைதிகளை விடுதலை!

Thursday, September 12, 2013
இலங்கை::இன்று நினைவுக்கூறப்படும் கைதிகளின் தினத்தை முன்னிட்டு சுமார் ஆயிரம் கைதிகளை விடுதலை செய்ய சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் இவர்கள் இவ்வாறு விடுதலை செய்ய தீர்மானித்ததாக திணைக்களத்தின் ஆணையாளரும், ஊடக பேச்சாளருமான காமினி குலத்துங்க எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
 
கைதிகளின் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்றைய தினம் சுமார் ஆயிரம் கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர். வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வழங்கப்படும் பொது மன்னிப்பு போன்றே இதுவும் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment