Monday, September 2, 2013

எந்த நாட்டின் தாக்குதலையும் சந்திக்க தயார்: சிரியா அதிபர் அறிவிப்பு!

Monday, September 02, 2013
கெய்ரோ::டமாஸ்கர் நகரின் அருகே ரசாயன குண்டுகளை வீசி சொந்த நாட்டு மக்களை கொன்றதாக கூறி, சிரியா மீது ராணுவ தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது.

இதுபற்றி சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் கூறுகையில்; எந்த அன்னிய நாட்டின் தாக்குதலையும் சந்திக்க சிரியா தயாராக இருப்பதாக கூறினார். உள்நாட்டில் தீவிரவாத குழுக்களுடனும் அந்த குழுக்களின் ஆதரவாளர்களுடனும் நாங்கள் தினந்தோறும் போரிட்டு வருகிறோம்.

இதேபோல் அன்னிய சக்திகள் தாக்குதல் நடத்தினாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என்று அப்போது அவர் குறிப்பிட்டார்.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment